ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழா : அவரது திருவுருவச் சிலைக்கு,அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழா : அவரது திருவுருவச் சிலைக்கு,அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

புதன், செப்டம்பர் 07,2016,

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரையில் திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் பி.கே.மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழாவை முன்னிட்டு,நேற்று மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், அரசரடி பகுதியில் அமைந்துள்ள மூக்கையாதேவரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு. செல்லூர் கே.ராஜு, திரு. ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், கழகத்தினர் ஊர்வலமாகச் சென்று, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள மூக்கையாதேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.