அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நீக்கம் : அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவிப்பு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நீக்கம் : அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017,

சென்னை: அதிமுக அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.