அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

வியாழன்,டிசம்பர் 29,2016,

சென்னை ; அதிமுக பொதுக் குழு இன்று வியாழக்கிழமை கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி, அதிமுக பொதுக் குழு கூட்டம், இன்று வியாழக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது. விதிகளின் படியே பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

பொதுகுழுக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை யாரும் அந்த பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மனு தாக்கலும் செய்யவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா கடந்த 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர்.என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்தார்.