அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016,

அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடிகர் ராமராஜன் மேல்விஷாரம் நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து, மேல்விஷாரம் கத்தியவாடி சாலை சந்திப்பில் நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்

தரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கினார்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கி கேபிள் இணைப்புக்காக நம்மிடமே பணம் வாங்கி அவரது குடும்ப வருவாயை பெருக்கிக் கொண்டார்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டன.

ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றார் ராமராஜன்.

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராமு, முன்னாள் அமைச்சர் அ.முகமது ஜான், மேல்விஷாரம் நகரச் செயலாளர் ஏ.இப்ராகிம் கலிலுல்லா, நகர்மன்றத் தலைவர் பி.அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.