அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மே 30 2017 ,செவ்வாய்க்கிழமை,

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக் கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சத வீதம் இட ஒதுக்கீடு  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்பட விருக்கும்  4 விழுக்காடு ஒதுக்கீட்டில் (எ) பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும்,  (பி) செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், (சி) கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீதமும், (டி) புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறை பாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே (எ) முதல் (டி) வரையிலுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும்  பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும்  என  ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த 4 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறு வனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.