அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனி, மே 21,2016,

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பண விநியோக விவாகரம் எழுந்ததையடுத்து 16-ம் தேதி நடைபெற வேண்டிய வாக்குப்பதிவு மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது ஜூன் 13-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியை விரைவில் அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.