அரியலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி
ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016,
அரியலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரியலூர் நகராட்சியில் 9வது வார்டு கவுன்சிலராக உள்ள குணா என்பவரது வீடு, நீதிமன்ற சாலையில் உள்ளது. இவரது வீட்டில் திமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் 8 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கவுன்சிலர் குணாவின் மனைவி ஜெயந்தி என்பவர், அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு தலைவராக உள்ளார்.
இந்த குழுவில் உள்ள 20 பெண்களுக்கு பணத்தை பிரித்து கொடுக்க வீட்டிற்கு வரவழைத்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, சோதனை நடைபெற்று வருகின்றது.