அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் : ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் : ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சனி, மார்ச் 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கழக அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் நகரக்கழகம் சார்பில், மஞ்சக்குப்பத்தில், கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட மருதாடு கிராமத்தில், வந்தவாசி கிழக்க ஒன்றியக்கழகம் சார்பில், கழக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம், அமைச்சர் திரு. முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில், தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் உயர்வுக்கும் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் திரைப்பட நடிகர் திரு. ராமராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மதுரவாயல் பகுதிக்கழகம் சார்பில் இராமாபுரத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் 5 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, அரியலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், அரியலூர் கடைவீதி பகுதிகளில், கழக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள், பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள், மாணவர் அணியினர் பங்கேற்றனர்.