அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்  பழனியப்பன் மறைவிற்கு  முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

புதன், செப்டம்பர் 14,2016,

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியக்கழக செயலாளர் பி.எல்.பழனியப்பன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில்;

 புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
அதிமுகவின் மீதும், அதன் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால உறுப்பினர் பழனியப்பன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.