அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க பேச்சாளர் தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனி, ஆகஸ்ட் 27,2016,

அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரும், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு, கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன், உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின்மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த, ஆரம்பகாலக் கழக உடன்பிறப்பு திரு. தீப்பொறி கார்த்திகேயன், தலைமைக் கழகப் பேச்சாளராக, கழகத்தின் கொள்கைகளையும், கழக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியினரின் பொய்ப்பிரச்சாரங்களையும், நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார் – திரு. தீப்பொறி கார்த்திகேயனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.