அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் நாளை திண்டுக்கல்லில் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் நாளை திண்டுக்கல்லில் பிரசாரம்

சனி, ஏப்ரல் 23,2016,

அ.தி.மு.க. வேட்பாளர் களை ஆதரித்து முதல் கட்டமாக சரத்குமார் திண்டுக்கல்லில் நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருச்செந்தூர் தொகுதியில் ஏற்கனவே அவர் தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் முதல் கட்டமாக திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 24-ந்தேதி (நாளை) முதல் 26-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து 24-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சரத்குமார் பிரசாரம் செய்கிறார்.

மடத்துக்குளம், உடுமலை, பல்லடம், திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு), அவினாசி, கோபி, பவானி, ஈரோடு கிழக்கு தொகுதிகளில் 25-ந்தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு குமாரபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

ஈரோடு-பொள்ளாச்சி

ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளில் 26-ந்தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் சரத்குமார் பேசுகிறார்.