அ.தி.மு.க. 190 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் : தினபூமி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

அ.தி.மு.க. 190 தொகுதிகளில்  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் : தினபூமி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

சனி, மே 14,2016,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 190தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தினபூமி நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு 40 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வெறும் 4இடங்களே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது அ.தி.முக.விற்கே 48.6சதவீத வாக்குகளும் தி.மு.கவிற்கு 27.4சதவீதமும் மக்கள் நல கூட்டணிக்கு 8.9சதவீதமும் பா.ஜ.க.விற்கு 3.8சதவீதமும் பா.ம.கவிற்கு 4.5சதவீதமும் நாம் தமிழர் கட்சிக்கு 1.9சதவீதமும்  வாக்குகள் கிடைத்துள்ளன. 4.9சதவீதம் பேர்  கருத்து கூற விரும்பவில்லை.

.தமிழக சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நூறு சதவீத வாக்கப்பதிவை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே அ.தி.மு.க. கூட்டணி போட்டியிடுகிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனை. அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க. ஒரு அணியாகவும் மற்றும் பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இவை தவிர மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் சில இடங்களில் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவுற்றது. மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மே 2-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள். அன்றைய தினம் சில மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாள்களாக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். முதல்வர் ஜெயலலிதா சென்னை தீவுத்திடலில் தனது பிரச்சாரத்தை தொடங்கி, அதன்பிறகு விருத்தாச்சலம், தருமபுரி, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, அருப்புக்கோட்டை, மதுரை, விழுப்புரம்.அரக்கோணம்,நெல்லை உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது அரசு செய்த சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் பட்டியலிட்டார்.

பின்னர் சிலதினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் அனைவருக்கும் செல்போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் ஸ்கூட்டி வாங்க மானியம், தாலிக்கு தங்கம் ஒரு பவுன் வழங்கப்படும்  மாணவர்களின் கல்விக்கடன்களை அரசே செலுத்தும், பள்ளி குழந்தைகளுக்கு  காலை சிற்றுண்டி அம்மா பேங்கிங் கார்டு ,அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர நடவடிக்கை, மகளிருக்கு 9 மாத பேறுகால விடுமுறை, விலையில்லா செட்டாப் பாக்ஸ் போன்றஅறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தொடர்பாக  தினபூமி நாளிதழ் கருத்துக்கணிப்பு நடத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம்  11ஆயிரத்து 700 நபர்களிடம் கருத்துக்கணிப்புதினபூமி சார்பில் நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க.விற்கு 190 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. 190தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் படி முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வராகமீண்டும்பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இந் த கருத்துக்கணிப்பில் தி.மு.க.விற்கு 40 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வெறும் 4 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

தினபூமி நடத்திய கருத்துக்கணிப்பில்  அ.தி.மு.கவிற்கு 48.6சதவீத வாக்குகளும், தி.மு.க.விற்கு 27.4சதவீத வாக்குகளும் தே.மு.தி.க. -மக்கள் நலக்கூட்டணிக்கு 8.9சதவீத வாக்குகளும் பாரதிய ஜனதாவிற்கு 3.8சதவீத வாக்குகளும் பாட்டாளிமக்கள் கட்சிக்கு 4.5சதவீத வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 1.9சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. மீதமுள்ள 4.9சதவீதம் பேர் கருத்து கூறவிரும்பவில்லை. ஆக தினபூமி நாளிதழ் நடத்திய கருத்துகணிப்பின்  மூலம் 190 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளது. ஏற்கனவே என்.டி.டி.வி டைம்ஸ் நவ் சி.என்.என். ஐ.பி.என்  ஆகிய தொலைக்காட்சிகளும் சமீபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளும் அ.தி.மு.கவிற்கே சாதகமாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, மேற்கண்ட கருத்துக்கணிப்பு தினபூமிநாளிதழால் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.