ஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஜூலை ,10 ,2017 ,திங்கட்கிழமை,
சென்னை : ஆசிய தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம், ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. லட்சுமணன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், நான்கு இன்ட்டு 400 மீட்டர் தொடர் ஓட்டதில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆரோக்கிய ராஜிவ் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்களுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், திரு. லட்சுமணனுக்கு 20 லட்சம் ரூபாயும், திரு. ஆரோக்கிய ராஜிவுக்கு 15 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.