ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் N.R. சிவப்பிரகாசம்,அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் N.R. சிவப்பிரகாசம்,அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, மே 15,2016,

ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. N.R. சிவப்பிரகாசம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம், காட்டு மன்னார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. N.R. சிவப்பிரகாசம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.