ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்

வியாழன் , ஜூன் 23,2016,

சென்னை:கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றுகிறார்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 16–ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மறுநாள், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து, 20–ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள். இந்த நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) பேசுகிறார்.

ஏற்கனவே, தமிழக சட்டசபை கூட்டம் கடும் விவாதங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இன்றைய பதில் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.