இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 02,2016,

இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு.R.B.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று  வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் திரு.R.B.உதயகுமார், இணையவழி பட்டா வழக்கும் திட்டத்தின்மூலம் இதுவரை 8 லட்சம் பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வகையில், வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கொண்டுசென்று அம்மா திட்டம் என்ற நிர்வாக புரட்சியை ஏற்படுத்தியவர் முதலமைச்சர்  ஜெயலலிதா எனவும் அமைச்சர் திரு.R.B.உதயகுமார் தெரிவித்தார்.