இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் பேட்டி

இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார்  முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் பேட்டி

சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016,

ஈழத்தமிழர்களின் உரிமையையும், நலன்களையும் நிலைநாட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஈழத்தமிழர்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன், செய்தியாளர்களிடம் பேசியபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்களைநிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டு, தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகளுக்காக ஈழத்தமிழர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.