ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016,

ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி கற்க, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி கற்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழி கல்வியை கற்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி உள்ளதால், அப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏழை மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி கற்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.