உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு  தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜூலை 13,2016,

பணியின்போது உடல்நலக் குறைவு, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் தனது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் விவரம்: சென்னை பெருநகர புனித தோமையர்மலை உதவி ஆணையாளர் கே.கே.முருகேசன், புதுக்கோட்டை ஏம்பல், ஆய்வாளர் குமாரி (சிவகங்கை),

உதவி ஆய்வாளர்கள் கே.கணேசன் (சேலம் மாநகர அரசு மருத்துவமனை), துரைபாண்டியன், (தென்காசி), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சி.சவரிமுத்து, ஆர்.கோபால்சாமி (கோவை சாய்பாபா காலனி), முகமதுகான் (நெல்லை மேலப்பாளையம்), பி.சங்கர் (விழுப்புரம் பகண்டை), கே.சிவகுமார் (நாகை புதுப்பட்டினம்).

தலைமைக் காவலர்கள் சிவசுப்பிரமணியன் (ஸ்ரீவைகுண்டம்), ஸ்ரீனிவாசன் (திருவள்ளூர்- மப்பேடு), குமரன் (கோவை- குனியமுத்தூர்), கிளாரன்ஸ் ஜெயகரன் (சென்னை- அசோக் நகர்), பொய்யாமொழி (அரியலூர்- திருமானூர்), ஜெ.வைத்தியநாதன் (விழுப்புரம்- சத்தியமங்கலம்), காவலர்கள் பி.சிவசங்கர் (சென்னை ஆயுதப்படை), ஜி.ராஜா (சேலம் இரும்பாலை) ஆகியோர் உடல்நலக் குறைவாலும், விபத்துகளிலும் சிக்கி இறந்தனர்.

சென்னை-மாதவரம், பொள்ளாச்சி, தருமபுரி பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் டி.மகாலிங்கம், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.முத்துலிங்கம், சேலம் சூரமங்கலம் தலைமைக் காவலர் ஆர்.சாம்பசிவம் ஆகியோர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். விழுப்புரம் கள்ளக்குறிச்சி முதல் நிலைக் காவலர் என்.ராஜேந்திரன், தண்ணீர் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் ஜெயக்குமார், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார்.என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.