உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

ஞாயிறு, ஜூலை 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 140 பயனாளிகளுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஏ.சுந்தரவல்லி, வருவாய்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினை தெரிவித்தனர்.