எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

செவ்வாய், ஜனவரி 17,2017,

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று திறந்து வைத்தார்.பின்னர் ராமாவரம் தோட்ட இல்லத்தின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளிக்கு சென்றார். அந்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, எம்ஜிஆர் சிறப்பு மலரை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ராமாவரம் இல்லத்திற்கு சென்ற சசிகலா, நுழைவு வாயிலில் அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர், ராமாவரம் தோட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று திறந்து வைத்தார்.

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் பள்ளி மாணவ-மாணவிகள் இருபுறமும் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் ராமாவரம் தோட்ட இல்லத்தின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளிக்கு சென்றார். அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் சசிகலா கலந்து கொண்டு அந்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். மாணவ-மாணவிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவிகள் வழங்கினார்.

இதையடுத்து, பள்ளி மாணவ – மாணவியருடன் சசிகலா, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு மதிய உணவு பரிமாறினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் சசிகலா சமமாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.