எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டு யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ,அவரையே ஆதரிக்க வேண்டும் : எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டி

எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டு யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ,அவரையே ஆதரிக்க வேண்டும் : எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டி

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017,

சென்னை : அனைத்து எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிக்கு சென்று மக்களின் கருத்தை கேட்க வேண்டும். மக்கள் யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ, அவரை ஆதரிக்க வேண்டும் என்று கவுண்டாம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்தார்.

நேற்று  வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். இவருடன் இணைந்த பிறகு, எனது தொகுதி மக்களிடம் இருந்து தொடர்ந்து எனக்கு ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.எனவே அனைத்து எம்எல்ஏ-க்களும் உடனடியாக தனது தொகுதிக்கு சென்று மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மக்கள் யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ, அவரை ஆதரிக்க வேண்டும். அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களில் பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்” என்று ஆறுகுட்டி கூறினார்.