எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

சனி, மே 07,2016,

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத வண்ணம் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். 

தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தாம் போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திறந்தவேனில் அமர்ந்தபடி பிரச்சாரம் செய்த ஜெயலலிதா அதிமுக அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் மின்வெட்டிலிருந்து மீண்டுள்ளதாகக் கூறினார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்ட ஜெயலலிதா, சென்னை மழைவெள்ளப் பாதிப்புக்கு உள்ளானபோது ஆர்.கே.நகரில் மட்டும் 48 கோடி ரூபாய் அளவிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத அளவிற்கு மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.