கச்சத்தீவு விஷயத்தில், தான் செய்த தவறை மூடிமறைக்க தி.மு.க. முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விஷயத்தில், தான் செய்த தவறை மூடிமறைக்க தி.மு.க. முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதன், ஜூன் 22,2016,

கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்த போது, அன்றைய தி.மு.க. அரசு, இதனை தடுத்திருந்தால், தமிழக மீனவர்களுக்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது என மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பேசிய திரு. பொன். ராதாகிருஷ்ணன், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட விஷயத்தில், தி.மு.க., தான் செய்த தவறை மூடிமறைக்க பார்ப்பதாக கூறினார். கச்சத்தீவை மீட்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.