கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வேலூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட  வேலூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், ஜூலை 19,2016,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஜி.ஜி.ரவி (28–வது வட்டம், சத்துவாச்சாரி மேற்கு பகுதி, வேலூர் மாநகராட்சி) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.