கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 12,2016,

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்த பொறுப்புக்கு திரு.V.V.செந்தில்நாதன் நியமிக்கப்படுவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் திரு.V.V.செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பொறுப்பில் திரு.த.ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.