கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

ஜூன் 03,2017 ,சனிக்கிழமை,

வேலூர் ; இந்திய அளவில் தமிழகம் கல்வித்துறையில் முதல் இடம் வகித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார்.

வேலூரில் நடந்த நிகழ்ச்சியில்,  6 மாவட்டங்களில் உள்ள மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை அவர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,இந்திய அளவில் தமிழகம் கல்வித்துறையில் முதல் இடம் வகித்து வருவதாக பெருமிதத்துடன் கூறினார்.

கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி கல்வி முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார். வேலூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதலான கல்வி மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.