காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

சனி, செப்டம்பர் 17,2016,

சென்னை  ; காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காவேரியிலிருந்து தமிழகத்திற்கு முறைப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரையே கர்நாடக அரசு கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.