“கிள்ளியூர் தொகுதியில் அரசு கல்லூரி தொடங்கப்படும்’ :அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் உறுதி

“கிள்ளியூர் தொகுதியில் அரசு கல்லூரி தொடங்கப்படும்’ :அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் உறுதி

திங்கள் , ஏப்ரல் 18,2016,

கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் தெரிவித்தார்.

கிள்ளியூர் தொகுதி அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது:

இத்தொகுதி உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கடலோரக் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படும். கொல்லங்கோடு பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதுடன் ரப்பர் தொழிற்சாலை கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ. சலாம், முன்சிறை ஒன்றியச் செயலர் ஜீன்ஸ், தொகுதிச் செயலர் எஸ்.எம். மோகன், ஒன்றிய முன்னாள் செயலர் மைதீன், கீழ்குளம் பேரூர் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.