கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

புதன், ஏப்ரல் 27,2016,

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க.வின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்து அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ், அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் கழக வேட்பாளர் திரு. மனோகரனை ஆதரித்து, வாக்கு சேகரித்த திரு. செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்ததாக குற்றம் சாட்டினார்.