சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது ஏன்? : நாஞ்சில் சம்பத் கேள்வி

சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது ஏன்? : நாஞ்சில் சம்பத் கேள்வி

சனி, ஏப்ரல் 23,2016,

சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி எதற்காக முதல்வர் இருக்கைக்கு ஏன் ஆசைப்படுகிறார் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வியெழுப்பி உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாகவும், அதனால் அடுத்த தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி விட்டதாகவும் தெரிவித்தார். 

ஆனால், மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுக, மக்களுக்கு எதுவும் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். சட்டமன்றத்திற்கே வராத கருணாநிதி எதற்காக மீண்டும் முதல்வர் இருக்கைக்கு ஆசைப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.