சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

செவ்வாய்கிழமை, மார்ச் 15, 2016,

சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என ஜான்பாண்டியன் கூறினார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டி யன் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்த லில் அ.தி.மு.க. அணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு தீர்மான முடிவுபடி மீண்டும் ஆதரவு அளிக்க உள்ளோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறைப் படி தீர்மான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளோம்.அ.தி.மு.க.வில் சீட்டுகளை எதிர் பார்த்து இருக்கிறோம். அழைப்பு வந்ததும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவோம். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் தொண்டர்களை கொண்ட பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது.

எனது தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குலவேலாளர் அமைப்பும், எங்கள் கட்சியும் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம். அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை கட்சிக்காக ஒரு மாநாடு கூட நடத்தவில்லை. 5 ஆயிரம் தொண்டர்களை கூட கூட்டமுடியாத நிலையில் தான் கிருஷ்ணசாமி உள்ளார்.  எங்களது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பலம் வாய்ந்த அமைப்பாக இருப்பது எங்களுக்கு கூடுதல் பலம்.இவ்வாறு ஜான்பாண்டி யன் கூறினார்.