சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் நன்றி

சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016,

சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. அதில், சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர்.