சரக்கு கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சரக்கு கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை, 

சரக்கு கப்பல் மோதிய விபத்தில் இறந்த குமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், வாணியக்குடி மீன்பிடி கிராமத்தைச்சேர்ந்த எர்னஸ்ட் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் அவருடன் 13 மீனவர்கள் கடந்த 8-ம் தேதி கேரளாவின் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் கடந்த 10-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, சரக்கு கப்பல் மோதியதில், விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த மீனவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 11 மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதில், குமரி மாவட்டம் கல்குளம், குளச்சலை சேர்ந்த ஆன்டனி ஜான், அசாமைச் சேர்ந்த மற்றொரு மீனவரும் இறந்துள்ளனர். அசாமைச் சேர்ந்த காமாணல் போன மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். இதில் உயிரிழந்த ஆன்டனி ஜானின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.