சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியாழன், ஆகஸ்ட் 25,2016,

சென்னை : சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் கே.ஆர்.பாக்கியம் சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்புச்சகோதரர் பாக்கியத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.