சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஜூலை 6 ,2017 ,வியாழக்கிழமை ,
சென்னை : காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை வரும் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்தநாள் வருவதாகவும், அவரை கவுரவிக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைக்குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.