செங்கோட்டையன் பொய் சொல்கிறார் : அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றச்சாட்டு

செங்கோட்டையன் பொய் சொல்கிறார் : அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017,

புது டெல்லி : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மைத்ரேயன் தலைமையிலான 12 எம்பிக்கள் சந்தித்து  வலியுறுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.பி மைத்ரேயன்,மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் சொல்வது உண்மையல்ல. அது பொய்.ஆளுநர் வித்யாசாகர் ராவ், பா.ஜ.க தலைவர் அமித் ஷா,ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெயலலிதா அவர்களை சந்திக்க அப்பொல்லோ மருத்துவமனை வந்தபோது, நோய் தொற்று ஏற்படும் என்று காரணம் சொல்லி, பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், செங்கோட்டையன் மட்டும் பார்த்ததாக சொல்கிறார். அவருக்கு மட்டும் “Immunity” அதிகம் உள்ளதா?இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே குடியரசுத் தலைவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்த உத்தரவிடுவார் என நம்புகிறோம்’ என்றார்.