சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் : டோக்கன்கள் வழங்கப்படுகிறது

சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் : டோக்கன்கள் வழங்கப்படுகிறது

வெள்ளி, மே 27,2016,

சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக் கன்கள் வழங்கப்பட்டது.
தற்போது, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் டோக்கன் பெற்றவர்கள் குடும்ப அட்டை நகல், புகைப்பட அடையாள அட்டை நகல்களை டோக்கன் பெற்ற மையங்களில் வழங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங் களுக்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், புதிதாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, குடும்ப அட்டையுடன் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தின் அருகில் உள்ள மாநகர் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.