சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாமில்,உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நன்றி

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாமில்,உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நன்றி

சனி, ஜூலை 09,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

வருவாய்த்துறையினரைத் தேடி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்த நிலையில், பொதுமக்களைத் தேடிச் சென்று வருவாய்த்துறையினர் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்தான் அம்மா திட்ட சிறப்பு முகாம்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், உடனுக்குடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினர்.

இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்காடு மற்றும் மேல்மாங்காடு பகுதிகளில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மக்களைத் தேடி வந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.