ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.; ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.; ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

வெள்ளி, ஜனவரி 27, 2017,

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் தான் என்றும், இதைப்பற்றி பேச தி.மு.க. மற்றும் அதன் செயல் தலைவருக்கு அருகதையில்லை என்றும் தெரிவித்தார். காளைகளை காட்சிப்படுத்த கூடாத பட்டியலில் சேர்க்கும் பொழுது தி.மு.க. உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள் என்றும் அதை அவர்கள் தடுக்கவில்லை என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.