ஜூன் 6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

ஜூன்  6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி, ஜூன் 03,2016,

சென்னை: அண்மையில் நிறைவடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வருகிற 6 ஆம் தேதி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்.

புரட்சித் தலைவர் ஆழுசு சிலை – பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை.

கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு-வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு.

வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம்-எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ.நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர் ஆகிய இடங்களில் முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.