டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி அனைவரையும் வழி நடத்துவார் : கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி

டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி அனைவரையும் வழி நடத்துவார் : கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை, 

கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி, அனைவரையும் வழி நடத்துவார் என கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் இன்று கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கழகத் துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தொடர்ந்து கழகப் பணியாற்றுவார் என தெரிவித்தார்.