தனித்தனியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது விரைவில் ஓன்று படுவோம் : அமைச்சர் ஜெயக்குமார்

தனித்தனியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது விரைவில் ஓன்று படுவோம் : அமைச்சர் ஜெயக்குமார்

ஜூலை ,7 ,2017 ,வெள்ளிக்கிழமை, 

திருச்சி : அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை என்றும் நாங்கள் விரைவில் விரைவில் ஓன்று படுவோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து சென்றால் கட்சியில் பிளவுபட்டதாக அர்த்தமில்லை,தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது.நாங்கள் விரைவில் விரைவில் ஓன்று படுவோம்.
அதிமுக மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது. மத்திய அரசிடம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளதால் மோடியை சந்தித்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி தான் அமையும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.