தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

திங்கள் , ஏப்ரல் 25,2016,

தனித் தமிழீழம் அமைவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண முடியும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.இலங்கையில் முற்றிலும் அமைதி நிலவி, தமிழர்களுக்குப் பாதுகாப்பு நிலவும் சூழ்நிலை உருவானால்தான் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடு என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதையும் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.