தமிழகத்தின் வளர்ச்சி ஆச்சரியமளிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மனைவி பாராட்டு

தமிழகத்தின் வளர்ச்சி ஆச்சரியமளிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மனைவி பாராட்டு

வியாழன் , ஜூன் 30,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தைரியத்தையும், அரசியலில், தனியொரு ஆளாக நின்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சரின் திறமையையும் கண்டு பிரமித்துப்போனதாக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் மனைவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, திரு. பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், “குமுதம்” வார இதழுக்கு பேட்டியளித்துள்ள கேரள முதலமைச்சரின் மனைவி திருமதி கமலா, முதலமைச்சர்  ஜெயலலிதாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி, தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள திருமதி கமலா, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்கள் நலத்திட்டங்களால், தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தனியாளாக நின்று, திரு. கருணாநிதியை எதிர்கொண்டு, மகத்தான வெற்றியை அடைந்துள்ள தைரியத்தைப் பார்த்து, தான் பிரமித்துப்போனதாக அந்த பேட்டியில் திருமதி கமலா குறிப்பிட்டுள்ளார்.