தமிழகத்தில் ஆட்சியை கலைக்க நிலைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது : தம்பிதுரை

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க நிலைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது  : தம்பிதுரை

ஜூன் 18, 2017,ஞாயிற்றுகிழமை,

 சென்னை : தமிழகத்தில் ஆட்சியை கலைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்ற அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்ததாக விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆட்சியை கலைத்தால், தான் முதலமைச்சராகலாம் என ஸ்டாலின் கனவு காணுகிறார். அவர் கனவு பலிக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீதமுள்ள 4 ஆண்டுகள் தொடரும்.
இவ்வாறு மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.