தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு : கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு : கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

திங்கள் , மே 23,2016,

தமிழகத்தில் 6வது முறையாக முதலமைச்சராக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்றதையொட்டி, கழகத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, கழக சட்டமன்ற கட்சித் தலைவராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சராக  ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதையொட்டி, தேனி மாவட்டம், அம்மாப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க.வினர் வீடுவீடாகச் சென்று, இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதேபோல், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.