தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

வெள்ளி, ஜூலை 29,2016,

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று  பட்ஜெட் மீது 4-வது நாளாக விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி இருந்ததாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பெருமிதத்துடன் அமைச்சர் தெரிவித்தார். சுவாதி கொலை வழக்கு உள்பட பல வழக்குகளிலும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக காவல்துறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன என்றார் ஓ.பன்னீர்செல்வம்.