தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

வியாழன் , செப்டம்பர் 15,2016,

மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் நாளுக்கு நாள் புதுப்புது சாதனைகள் படைத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் ஒரே நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் இணைவது இதற்கு முன் தமிழகம் கண்டிராத சரித்திர சாதனையாகும்.

சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டைகளை அவர்களுக்கு வழங்கினார். தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ்., த.மா.க, ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டு தங்களை நெகிழ்ச்சியுடன் கழகத்தில் இணைந்து கொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, முன்னிலையில் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக, பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., ம.தி.மு.க, விடுதலை சிறுதைகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும்; இன்ன பிற அமைப்புகளில் பணியாற்றி வந்தவர்களும், கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் புறநகர், கோவை புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், மதுரை புறநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணை தலைவர்கள், பேரூராட்சி மன்ற துணை தலைவர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் என, 10 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட 91,308 பேர் தங்களைக் கழகதின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

மக்களுக்கான நலத் திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதிலும், நாளுக்கு நாள் புதுப் புது சாதனைகளைப் படைத்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 91 ஆயிரத்து 308 பேர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டது, ஒரு சாதனை நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒரே நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91 ஆயிரத்து 308 பேர் அ.இ.அ.தி.மு.க-வில் இணைவது இதற்கு முன் தமிழகம் கண்டிராத ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.