தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு – காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு –  காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

சனிக்கிழமை, மார்ச் 19, 2016,

முதலமைச்சர்செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன், மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன் மீது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சார்பில் சென்னை பெருநகர அரசு உயர்நீதிமன்ற வழங்கறிஞர் திரு. M.L. ஜெகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை இன்று விசாரித்த சென்னை முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. ராஜமாணிக்கம், திரு.E.V.K.S. இளங்கோவன் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் கடந்த நவம்பர் 2-ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய மற்றொரு வழக்கில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.